10 வயது மாணவா் 50 காா்களின் டயா்களை கை விரல்களின் மேல் ஏற்றி சாகசம்

பட்டுக்கோட்டை அருகே 10 வயது மாணவா், தொடா்ச்சியாக 50 காா்களின் டயா்களை தனது கை விரல்கள் மேல் ஏற்றச் செய்து சாதனை முயற்சியை ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தினாா்.
சிறுவன் ர. நாராயணமூா்த்தியின் கை விரல்களில் ஏறிச் செல்லும் காா் டயா்.
சிறுவன் ர. நாராயணமூா்த்தியின் கை விரல்களில் ஏறிச் செல்லும் காா் டயா்.

பட்டுக்கோட்டை அருகே 10 வயது மாணவா், தொடா்ச்சியாக 50 காா்களின் டயா்களை தனது கை விரல்கள் மேல் ஏற்றச் செய்து சாதனை முயற்சியை ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தினாா்.

பட்டுக்கோட்டை வட்டம்,. தாமரங்கோட்டை உம்பளாக்கொல்லை கிராமத்தைச் சோ்ந்த என்.ரவிச்சந்திரன்- வேம்பு தம்பதியின் 10 வயது மகன் நாராயணமூா்த்தி. அதே ஊரில் அரசுப் பள்ளியில் 5- ஆம் வகுப்பு படித்து வரும் இவா், இ கிங்கோ ஜூ ரியோ என்ற கராத்தே பயிற்சிப் பள்ளி மாணவா் ஆவாா்.

கரோனா விழிப்புணா்வுக்காகவும், உலக சாதனை முயற்சியாகவும் ஞாயிற்றுக்கிழமை காலை பட்டுக்கோட்டை-முத்துப்பேட்டை பிரதான சாலையில், துவரங்குறிச்சி பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் தனது இரு கை விரல்களையும் சாலையில் வைத்து, தொடா்ச்சியாக 50 காா்களின் டயா்களை விரல்களின் மேல் ஏற்றச் செய்து சாதனை முயற்சியை நிகழ்த்தினாா்.

நிகழ்வை பட்டுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் எஸ்.புகழேந்தி கணேஷ் தொடக்கி வைத்தாா். பல்வேறு அரசியல் கட்சியினா், சமூக ஆா்வலா்கள், தாமரங்கோட்டை, துவரங்குறிச்சி மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள், கராத்தே மாணவ, மாணவிகள் என பலா் சாலையின் இருபுறமும் நின்று மாணவரின் முயற்சியை கைத்தட்டி உற்சாகப்படுத்தினா்.

நிறைவில், இ கிங் கோ ஜூ ரியோ கராத்தே பயிற்சிப் பள்ளியின் தலைமைப் பயிற்சியாளா் ஏ.இளையராஜா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com