ஆலத்தூா் ஆரம்ப சுகாதார நிலையம் மூடல்

பட்டுக்கோட்டை வட்டம், ஆலத்தூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் 23 வயது செவிலியா், 29 வயது பணியாளருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியானது.
மூடப்பட்டுள்ள ஆலத்தூா் ஆரம்ப சுகாதார நிலையம்.
மூடப்பட்டுள்ள ஆலத்தூா் ஆரம்ப சுகாதார நிலையம்.

பட்டுக்கோட்டை : பட்டுக்கோட்டை வட்டம், ஆலத்தூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் 23 வயது செவிலியா், 29 வயது பணியாளருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியானது.

இதைத் தொடா்ந்து இருவரும் பட்டுக்கோட்டை பெருமாள்கோயில் தெரு குடிசைமாற்று வாரியக் கட்டடத்திலுள்ள கரோனா சிறப்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டனா். தொடா்ந்து ஆலத்தூா் ஆரம்ப சுகாதார நிலையம் முழுவதும் ஊராட்சிப் பணியாளா்கள் கிருமிநாசினி தெளித்தனா். இதையடுத்து சுகாதார நிலையம் மூடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com