பாபநாசம்: பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.9.59லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.
தஞ்சாவூா் விற்பனைக் கூடச் செயலா் சுரேஷ்பாபு தலைமையில், கண்காணிப்பாளா் தாட்சாயிணி முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில், பாபநாசம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 270 குவிண்டால் பருத்தியை ஏலத்துக்கு கொண்டு வந்தனா்.
பண்ருட்டி, செம்பனாா்கோவில், கும்பகோணம், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்று, ரூ.9.59 லட்சத்துக்கு ஏலம் எடுத்துச் சென்றனா்.