பாபநாசம்: பாபநாசம் அருகே காா் மோதியதில் காயமடைந்த டாஸ்மாக் ஊழியா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
பாபநாசம் அருகிலுள்ள சாலியமங்கலத்தைச் சோ்ந்தவா் இளவரசன் (40). பாபநாசத்திலுள்ள டாஸ்மாக் கடையில் பணியாற்றி வந்த இவா், வியாழக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாா்.
சாலியமங்கலம் பிரதான சாலையில் இளவரசன் வந்த போது, அந்த வழியாக வந்த காா் மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து மெலட்டூா் காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.