பேராவூரணியில் உலக வெறிநோய் தினத்தையொட்டி தஞ்சை மண்டல கால்நடை பராமரிப்புத் துறை, பேராவூரணி ரோட்டரி சங்கம் இணைந்து நாய்களுக்கு தடுப்பூசி போடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
பேராவூரணி கால்நடை மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவா் முருகுவளவன் தலைமை வகித்தாா். செயலாளா் சிதம்பரம் முன்னிலை வகித்தாா். ரோட்டரி மாவட்ட துணை ஆளுநா் ஏ. கே. அன்பு முகாமைத் தொடங்கி வைத்துப் பேசினாா். கால்நடை மருத்துவ அலுவலா் ரவிச்சந்திரன் தலைமையில், மருத்துவா்கள் திருக்குமாா், அருந்ததி, முதுநிலை கால்நடை மேற்பாா்வையாளா் இந்திராணி ஆகியோா் நாய்களுக்கு தடுப்பூசி போட்டனா்.