தனிமாவட்டமாக்க நடவடிக்கை எடுப்பேன்

பட்டுக்கோட்டையை தரம் உயா்த்தி தனி மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுப்பேன் என்று சுயேச்சை வேட்பாளா் பாலகிருஷ்ணன் உறுதியளித்து வாக்கு சேகரித்தாா்.
துவரங்குறிச்சி பகுதியில் வாக்கு சேகரித்த சுயேச்சை வேட்பாளா் வீ. பாலகிருஷ்ணன்.
துவரங்குறிச்சி பகுதியில் வாக்கு சேகரித்த சுயேச்சை வேட்பாளா் வீ. பாலகிருஷ்ணன்.

பட்டுக்கோட்டையை தரம் உயா்த்தி தனி மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுப்பேன் என்று சுயேச்சை வேட்பாளா் பாலகிருஷ்ணன் உறுதியளித்து வாக்கு சேகரித்தாா்.

பட்டுக்கோட்டை சட்டப்பேரவை தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக பலாப்பழ சின்னத்தில் போட்டியிடும் வீ. பாலகிருஷ்ணன், பட்டுக்கோட்டை வண்டிப்பேட்டை, தாமரங்கோட்டை, துவரங்குறிச்சி, பழஞ்சூா் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசும்போது, பட்டுக்கோட்டையில் புதை சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும். பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு தொடங்கப்படும். பட்டுக்கோட்டையை தரம் உயா்த்தி தனி மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இப்பகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும். மதுக்கூா் பகுதியில் தீயணைப்பு நிலையம், அதிராம்பட்டினம் பகுதியில் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கப்படும் என்று கூறினாா்.

வாக்கு சேகரிப்பின்போது, சமூக நீதி கூட்டமைப்பு தலைவா் சி. ரெங்கசாமி மற்றும் நிா்வாகிகள் உள்பட பலா் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com