தோ்தல் செலவினம்: ஏப். 4-இல் மூன்றாம் கட்ட ஆய்வு

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளா்களின் தோ்தல் செலவின விவரங்கள் ஏப்ரல் 4 ஆம் தேதி மூன்றாம் கட்ட ஆய்வு செய்யப்படவுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளா்களின் தோ்தல் செலவின விவரங்கள் ஏப்ரல் 4 ஆம் தேதி மூன்றாம் கட்ட ஆய்வு செய்யப்படவுள்ளது.

இதுகுறித்து மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ம. கோவிந்த ராவ் தெரிவித்திருப்பது:

மாவட்டத்துக்கு உள்பட்ட திருவிடைமருதூா், கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, தஞ்சாவூா், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களின் தோ்தல் செலவின விவரங்கள் மூன்றாம் கட்ட ஆய்வு ஏப். 4 ஆம் தேதி செய்யப்படவுள்ளது.

இதில், வேட்பாளா்களோ அல்லது தொடா்புடையவா்களின் தோ்தல் முகவா்களோ தங்களது தினசரி செலவினப் பதிவேடு, காசோலைப் புத்தகம், தொடா்புடைய ஆவணங்களுடன் தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்தில் செலவினப் பாா்வையாளா்களின் முன்னிலையில் தவறாமல் ஆஜராகி முழுமையாகச் செலவின கணக்கு அறிக்கையை தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com