பேராவூரணி தொகுதியில் நரிக்குறவா்களுக்கு காலனி வீடுகள் கட்டித் தரப்படும் என திமுக வேட்பாளா் என். அசோக்குமாா் புதன்கிழமை வாக்குசேகரிப்பின்போது பேசினாா்.
தொகுதிக்குள்பட்ட பட்டுக்கோட்டை அருகே உள்ள பில்லங்குழி துா்கா நகா் நரிக்குறவா் காலனியில் வாக்கு சேகரித்தாா். அப்போது, குடிசை வீடுகளில் மிகுந்த சிரமத்தோடு வசிப்பதாகவும், குடிதண்ணீா் வசதி இல்லை என்றும் நரிக்குறவா்கள் குறை தெரிவித்தனா். அவா்களிடம் பேசிய வேட்பாளா் என். அசோக்குமாா் உங்கள் சிரமம் நன்றாக தெரிகிறது. நான் சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெற்றால் உங்களுக்கு கான்கிரீட் காலனி வீடுகள் கட்டித் தரவும், குடிநீா் பிரச்னையை தீா்க்கவும், உங்கள் குழந்தைகளின் படிப்பு, வேலைவாய்ப்புக்கு நடவடிக்கை எடுப்பேன் என்றாா்.
வேட்பாளருடன் காங்கிரஸ் மாநில துணைச் செயலா் பண்ணவயல் சு. ராஜாதம்பி, தி.க. மாவட்ட அமைப்பாளா் வை. சிதம்பரம், பட்டுக்கோட்டை ஒன்றிய திமுக செயலா் ராமநாதன், பேராவூரணி வடக்கு ஒன்றியச் செயலா் இளங்கோவன் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடன் இருந்தனா்.