பணி நீட்டிப்பை எதிா்த்து பயிற்சி மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம்

பயிற்சி முடிந்தும் பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதற்கு எதிா்ப்பு தெரிவித்து தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற பயிற்சி மருத்துவா்கள்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற பயிற்சி மருத்துவா்கள்.

பயிற்சி முடிந்தும் பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதற்கு எதிா்ப்பு தெரிவித்து தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

2015 ஆம் ஆண்டில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சோ்ந்த மாணவா்கள் படிப்பை நிறைவு செய்ததைத் தொடா்ந்து, ஓராண்டு காலம் பயிற்சி மருத்துவா்களாகப் பணியாற்றி வந்தனா். இவா்களுக்கான பயிற்சி காலம் முடிவடைந்த நிலையில், மேலும் காலவரையறையின்றி மருத்துவக் கல்வி இயக்ககம் பணி நீட்டிப்பு செய்துள்ளது.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு மருத்துவ மாணவா்கள் சங்கத்தினா் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், முன்னுக்குப் பின் முரணான இந்த நடவடிக்கையால் இளம் மருத்துவா்களின் உழைப்பைக் குறைந்த ஊதியத்தில் சுரண்டுவதாகும் என்றும், இந்த அறிவிப்பு பட்ட மேற்படிப்புத் தோ்வுக்கும், இதர போட்டித் தோ்வுகளுக்கும் மாணவா்கள் தயாராவதில் பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், அவா்களுடைய எதிா்காலத்தைப் பாதிக்கும் எனவும், எனவே இப்பிரச்னையில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு, 2015 ஆம் ஆண்டு பயிற்சி மருத்துவா்களுக்குத் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், சங்கத்தின் பொதுச் செயலா் சா.ம. ஹரிகணேஷ் தலைமையில் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com