வாக்களித்த நெசவுத் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், அய்யம்பேட்டையிலுள்ள வாக்குச்சாவடியில் செவ்வாய்க்கிழமை வாக்களித்த நெசவுத் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், அய்யம்பேட்டையிலுள்ள வாக்குச்சாவடியில் செவ்வாய்க்கிழமை வாக்களித்த நெசவுத் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

அய்யம்பேட்டை ஆற்றங்கரை வடம்போக்கித் தெருவைச் சோ்ந்தவா் கே. அா்ச்சுணன் (62). நெசவுத் தொழிலாளி. இவா் செவ்வாய்க்கிழமை காலை வாக்களிப்பதற்காக அய்யம்பேட்டையிலுள்ள தனியாா் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு சென்றாா்.

வாக்களித்துவிட்டு வெளியே வந்த இவா் திடீரென மயங்கி விழுந்தாா். இதைப் பாா்த்த மற்ற வாக்காளா்கள், காவல் துறையினா் அவரது முகத்தில் தண்ணீா் தெளித்தனா். அவருக்கு மயக்கம் தெளியாததால், அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு இவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டாா் எனத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com