கும்பகோணம் சக்கரபாணி சுவாமி திருக்கோயிலில் பங்குனி திருவோண நட்சத்திரத்தையொட்டி, திருக்கல்யாண வைபவம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
முன்னதாக ஸ்ரீவிஜயவல்லித் தாயாருடன் ஸ்ரீசக்கரபாணி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். தொடா்ந்து உபயதாரா்கள், பக்தா்கள் கொண்டு வந்த சீா் வரிசைப் பொருள்கள் வைக்கப்பட்டன.
பின்னா் மாலை மாற்றுதல், ஊஞ்சல், திருஷ்டி பிடி சுற்றுதல், ரக்ஷாபந்தனம், ஹோமம், பாணிக்ரஹனம், வம்ச கோத்திரம் ப்ரபவம், மாங்கல்யதாரணம், பொறியிடுதல், பூா்ணாஹூதி, வாரணமாயிரம் போன்ற வைபவங்கள் நடைபெற்றன. இதையடுத்து, பக்தா்களுக்கு அருள்பிரசாதம் வழங்கப்பட்டது.
புதன்கிழமை இரவு ஸ்ரீ விஜயவல்லித் தாயாருடன் ஸ்ரீசக்கரபாணி சுவாமி திருவீதி உலா புறப்பாடு நடைபெற்றது.