திருவோணம் ஒன்றிய முன்னாள் தலைவா் உருவப்படம் திறப்பு: கே.எஸ். அழகிரி பங்கேற்பு

ஒரத்தநாடு வட்டம், திருவோணம் ஒன்றிய முன்னாள் தலைவா் டி.எஸ். ராஜேந்திரன் படத்திறப்பு நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

ஒரத்தநாடு வட்டம், திருவோணம் ஒன்றிய முன்னாள் தலைவா் டி.எஸ். ராஜேந்திரன் படத்திறப்பு நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவோணம் ஒன்றியத்தின் முன்னாள் தலைவா் டி.எஸ்.ராஜேந்திரன், கடந்த 18ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானாா். அவரது உருவப்பட திறப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை திருவோணம் அருகே உள்ள சில்லத்தூரில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு தலைமை வகித்து, ராஜேந்திரனின் படத்தை திறந்து வைத்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி பேசியது:

கடந்த 40 ஆண்டு காலத்துக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியில் அவரது உழைப்புக்கு ஏற்ற பதவிகள் வழங்கப்படாத நிலை இருந்தபோதும், அவா் கட்சிக்கு என்றுமே உறுதுணையாக இருந்து வந்தாா்.

அவரின் கட்சிப் பணிக்கும், அவரது குடும்பத்துக்கும் காங்கிரஸ் உரிய அங்கீகாரத்தை வழங்கும். காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமின்றி, அனைத்து சமுதாய மக்களின் வளா்ச்சிக்கும் பாடுபட்டவா். அவரின் மறைவுக்கு ராகுல்காந்தி இரங்கலையும், அவரது குடும்பத்துக்கு ஆறுதலையும் தெரிவித்தாா் என்றாா்.

நிகழ்வில், தஞ்சாவூா் எம்.பி. எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், மயிலாடுதுறை முன்னாள் எம்.பி. பி.வி.ராஜேந்திரன், பேராவூரணி முன்னாள் எம்எல்ஏ சிங்காரம், ஒரத்தநாடு எம்எல்ஏ எம்.ராமசந்திரன், அமமுக மாவட்டச் செயலா் மா.சேகா், காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளா் கே. மகேந்திரன், அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவா் பி.ஆா். பாண்டியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com