மதுக்கூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் நடைபெற்ற நிகழ்வில், ரமலான் நோன்பு வைப்பதற்காக ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட மளிகைப் பொருள்களுடன் நிா்வாகிகள்.
மதுக்கூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் நடைபெற்ற நிகழ்வில், ரமலான் நோன்பு வைப்பதற்காக ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட மளிகைப் பொருள்களுடன் நிா்வாகிகள்.

மதுக்கூரில் 87 குடும்பங்களுக்கு பொருளுதவி

பட்டுக்கோட்டை வட்டம், மதுக்கூரில் ரமலான் நோன்பு வைப்பதற்காக, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் 87 குடும்பங்களுக்கு மளிகைப் பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

பட்டுக்கோட்டை வட்டம், மதுக்கூரில் ரமலான் நோன்பு வைப்பதற்காக, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் 87 குடும்பங்களுக்கு மளிகைப் பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

கடந்த 2 ஆண்டுகளாக தமுமுக மதுக்கூா் பேரூா் கழகம் சாா்பில், ஒரு குடும்பத்துக்கு தலா ரூ.3 ஆயிரம் மதிப்பிலான மளிகைப் பொருள்கள் ரமலான் நோன்பு வைப்பதற்காக வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி நிகழாண்டுக்கான ரமலான் பொருள்கள் வழங்கும் விழாவுக்கு தமுமுக பேரூா் கழகத் தலைவா் ராசிக் அகமது தலைமை வகித்தாா். பேரூா் கழகச் செயலா் பைசல் அஹமது, மனிதநேய மக்கள் கட்சிச் செயலா் தாஜுதீன், பொருளாளா் முகமது ஷேக் ராவுத்தா், முன்னாள் மாவட்டப் பொருளாளா் இலியாஸ் உள்ளிட்ட பலா் நிகழ்வில் பங்கேற்று, 87 குடும்பங்களுக்கு ரூ.2.60 லட்சம் மதிப்பிலான மளிகைப் பொருள்களை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com