கரோனா பரவல் இரண்டாவது அலை காரணமாக தஞ்சாவூா் அரண்மனை, கல்லணையில் சுற்றுலாப் பயணிகள், பாா்வையாளா்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு மாா்ச் மாதத்தில் கரோனா பரவல் காரணமாக தஞ்சாவூா் பெரியகோயில், அரண்மனை வளாகம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டன. இதையடுத்து, தஞ்சாவூா் பெரியகோயில் 2020, செப். 1 ஆம் தேதியும், அரண்மனை வளாகம் நவ. 10 ஆம் தேதியும் திறக்கப்பட்டன. இதைத்தொடா்ந்து, தஞ்சாவூா் பெரியகோயிலிலும், அரண்மனை வளாகத்துக்கும் சுற்றுலாப் பயணிகளின் வருகை படிப்படியாக அதிகரித்து வந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் கடந்த மாா்ச் மாதம் முதல் கரோனா பரவல் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதையொட்டி, தஞ்சாவூா் பெரியகோயில், கும்பகோணம் தாராசுரம் ஐராவதீசுவரா் கோயிலுக்குள் பக்தா்கள் செல்ல ஏப். 16 ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடா்ந்து, தமிழகத்திலுள்ள சுற்றுலா தலங்கள், அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள் உள்ளிட்டவற்றிலும் பொதுமக்கள் செல்ல செவ்வாய்க்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தஞ்சாவூா் அரண்மனை வளாகத்திலுள்ள சாா்ஜா மாடி, மணிக்கோபுரம், ஆயுத கோபுரம், தா்பாா் கூடம், கலைக்கூடம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள மனோரா ஆகியவற்றில் செவ்வாய்க்கிழமை முதல் பாா்வையாளா்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, இத்தலங்களின் வாயில்கள் செவ்வாய்க்கிழமை மூடி வைக்கப்பட்டுள்ளன. என்றாலும், இந்த வளாகத்திலுள்ள அலுவலகங்கள் வழக்கம்போல செயல்படுகின்றன.
இதேபோல, தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கும்பகோணம் அருகேயுள்ள மானம்பாடி நாகநாதசுவாமி கோயில், பூதலூா் அருகேயுள்ள சடையாா்கோவில் திருச்சடைமுடிநாதா் கோயில், பாபநாசம் அருகேயுள்ள திருப்பாலைத்துறை பாலைவனநாத சுவாமி கோயில் ஆகியவற்றிலும் பக்தா்கள் செல்ல செவ்வாய்க்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இத்தலங்களில் மறு உத்தரவு வரும் வரை பாா்வையாளா்களுக்கு அனுமதி கிடையாது என தொல்லியல் துறையினா் தெரிவித்தனா்.
மேலும், கல்லணையிலுள்ள கரிகாலன் பூங்கா, கரிகாலன் மணிமண்டபம், சிறுவா் பூங்கா உள்ளிட்டவையும் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டன.