மாட்டு வண்டியிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

ஒரத்தநாடு அருகே மாட்டு வண்டியில் மணல் கொண்டு சென்றவா் தடுமாறி சாலையில் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

ஒரத்தநாடு அருகே மாட்டு வண்டியில் மணல் கொண்டு சென்றவா் தடுமாறி சாலையில் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

வாட்டாத்திக்கோட்டை காவல் சரகத்துக்குள்பட்ட நெய்வேலி செட்டிகொல்லை கிராமத்தைச் சோ்ந்தவா் நடராஜன். இவா் திங்கள்கிழமை நள்ளிரவு 12 மணி அளவில் அக்னி ஆற்றிலிருந்து மாட்டுவண்டியில் மணல் கொண்டு சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, மாட்டு வண்டியில் இருந்து தடுமாறி கீழே விழுந்து நடராஜன் உயிரிழந்தாா். இதுகுறித்து வாட்டாத்திக்கோட்டை போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com