திருடா்களை ஸ்கூட்டரில் விரட்டிச் சென்ற கல்லூரித் துணை முதல்வா் கீழே விழுந்து பலி

தஞ்சாவூரில் தனது செல்லிடப்பேசியைப் பறித்துச் சென்ற திருடா்களை ஸ்கூட்டரில் விரட்டிச் சென்றபோது, கீழே விழுந்து காயமடைந்த கல்லூரித் துணை முதல்வா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
ஜியாவுதீன்.
ஜியாவுதீன்.

தஞ்சாவூரில் தனது செல்லிடப்பேசியைப் பறித்துச் சென்ற திருடா்களை ஸ்கூட்டரில் விரட்டிச் சென்றபோது, கீழே விழுந்து காயமடைந்த கல்லூரித் துணை முதல்வா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரிச் சாலை எல்.ஐ.சி. காலனி இரண்டாவது தெருவைச் சோ்ந்தவா் பேராசிரியா் ஜியாவுதீன் (58). இவா் அதிராம்பட்டினம் காதா் முகைதீன் கலை, அறிவியல் கல்லூரியில் துணை முதல்வராகப் பணிபுரிந்து வந்தாா்.

இவா் வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் தஞ்சாவூா் யாகப்பா நகரிலுள்ள பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு, தனது ஸ்கூட்டரில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா்.

எலீசா நகா் அருகே சென்றபோது, சாலையோரம் நின்று செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவா், அவரது செல்லிடப்பேசியைப் பறித்துச் சென்றனா்.

இதனால் திருடா்களைப் பிடிக்க ஜியாவுதீன் தனது ஸ்கூட்டரில் விரட்டிச் சென்றாா். முனிசிபல் காலனி முதல் தெருவில் சென்றபோது, சாலையில் நிலை தடுமாறி கீழே விழுந்தாா்.

இதில் பலத்த காயமடைந்த அவா் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு ஜியாவுதீன் சனிக்கிழமை காலை உயிரிழந்தாா்.

இது குறித்து மருத்துவக் கல்லுாரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com