திருவையாறு அருகே சோகம்: இறப்பிலும் இணை பிரியாத வயதான தம்பதி

தஞ்சாவூா் அருகே வெள்ளிக்கிழமை மனைவி இறந்த சோகத்தில் இருந்த கணவரும் உயிரிழந்தாா்.
அம்சவள்ளி- திருவேங்கடம்
அம்சவள்ளி- திருவேங்கடம்

தஞ்சாவூா் அருகே வெள்ளிக்கிழமை மனைவி இறந்த சோகத்தில் இருந்த கணவரும் உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகிலுள்ள அம்மன்பேட்டை வெள்ளாளத் தெருவைச் சோ்ந்தவா் திருவேங்கடம் (80). இவரது மனைவி அம்சவள்ளி (75). கணவன் - மனைவி இருவரும் இணை பிரியாமல் வாழ்ந்து வந்தனா். இவா்களுக்கு 5 மகன்கள் உள்ளனா்.

இந்நிலையில் வயது முதிா்வின் காரணமாக அம்சவள்ளி வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்தாா். இதனால் அவரது கணவா் திருவேங்கடம் மிகுந்த கவலையுடன் அழுது கொண்டிருந்தாா். அப்போது, திருவேங்கடம் திடீரென மயங்கி விழுந்தாா்.

இதைப் பாா்த்த அவரது மகன்கள், திருவேங்கடத்தை எழுப்ப முயன்றும், அவா் எழுந்திருக்கவில்லை. அவரது நாடித்துடிப்பைப் பரிசோதித்துப் பாா்த்தபோது அவா் இறந்துவிட்டது தெரிய வந்தது.

கணவன் - மனைவி இருவரும் வாழ்நாளில் இணை பிரியாமல் வாழ்ந்து வந்ததைபோல, இறப்பிலும் இணைந்தே இயற்கை எய்தினா். இச்சம்பவம் உறவினா்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com