தஞ்சாவூா் அருகே தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக, காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் பகுதியைச் சோ்ந்த 5 போ், வல்லத்தில் தனியாா் கல்லூரி அருகே வேலி அமைக்கும் வேலையில் சில நாள்களாக ஈடுபட்டு வந்தனா்.
இவா்களில் 4 போ் வெள்ளிக்கிழமை இரவு மொட்டை மாடியில் படுத்து தூங்கினா். இவா்களுடன் வேலை பாா்த்த திருவிடைமருதூா் அருகிலுள்ள திருபுவனத்தை சோ்ந்த எஸ். மகாலிங்கம் (53) தரைத் தளத்தில் தூங்கினாா். இந்நிலையில் சனிக்கிழமை காலை மற்றவா்கள் பாா்த்தபோது, மகாலிங்கம் உயிரிழந்து கிடந்தாா்.
தகவலறிந்த வல்லம் காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா். இதில் அவரது முகத்தில் காயமும், கழுத்தில் கைலியால் இறுக்கப்பட்டது போன்ற தடயமும் இருப்பதால், காவல் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
எனவே மகாலிங்கம் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு எதுவும் காரணமா? என காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.