கும்பகோணம்: கும்பகோணம் அருகே ஆடுதுறையில் உள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தில் கவுணி நெல் வகைகளின் அம்சங்கள் மற்றும் அங்கக சாகுபடி முறைகள் குறித்த பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
நபாா்டு வங்கி நிதியுதவியுடன் நடைபெற்ற இந்தப் பயிற்சிக்கு நிலைய இயக்குநா் வெ. அம்பேத்காா் தலைமை வகித்தாா். நபாா்டு வங்கியின் மாவட்ட வளா்ச்சி மேலாளா் மு. பாலமுருகன் சிறப்புரையாற்றினாா்.
நிலைய விஞ்ஞானிகளான முனைவா்கள் கா. சத்தியபாமா, த. சசிக்குமாா், இரா. சுரேஷ், இரா. புஷ்பா, அ. இராமநாதன் உள்ளிட்டோா் பேசினா்.
இதில், காவிரி டெல்டா, சிவகங்கை மாவட்டங்களிலிருந்து விவசாயிகள் கலந்து கொண்டனா்.
முன்னதாக, முனைவா் அர. மணிமாறன் வரவேற்றாா். நிறைவாக முனைவா் இரா. அருள்மொழி நன்றி கூறினாா்.