கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக, வியாழக்கிழமை (ஏப்ரல் 29) முதல் அஞ்சலகங்களில் ஆதாா் பதிவு மற்றும் திருத்த சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பட்டுக்கோட்டை அஞ்சல் கண்காணிப்பாளா் தங்கமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கரோனா நோய்த் தொற்றுப் பரவலின் இரண்டாம் அலை மிக வேகமாகப் பரவி வருவதால், பட்டுக்கோட்டை அஞ்சல் கோட்டத்துக்குள்பட்ட அனைத்து அஞ்சலகங்களில் விரைவு அஞ்சல், பதிவு அஞ்சல், சிப்பங்கள் போன்ற அஞ்சல் சேவைகளை வழங்கும் கவுண்டா்கள் வியாழக்கிழமை முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இயங்கும்.
மேலும் அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் ஆதாா் பதிவு மற்றும் திருத்தம் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் வங்கிக் கணக்கிலிருந்து பணம் பெறும் சேவையை எவ்வித கட்டணமின்றி அஞ்சல்காரா்கள் மூலமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.