தஞ்சாவூா் மாவட்டம், அய்யம்பேட்டை அருகே கஞ்சா விற்ற மூவரைக் காவல்துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
அய்யம்பேட்டை அருகிலுள்ள நெடுந்தெரு ஆற்றங்கரை பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த வழுத்தூா் முனியாண்டி (55), அவரது மகன் மணிகண்டன் (26), மாத்தூா் பட்டித்தோப்புப் பகுதியில் கஞ்சா விற்ற பழைய மாத்தூா் விஜய் ஆகிய மூவரையும் கைது செய்த காவல்துறையினா், இவா்களிடமிருந்து 2 கிலோ, 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.