திருக்கருகாவூா் கோயிலில் உணவு வழங்கல்

பாபநாசம் வட்டம், திருக்கருகாவூா் அருள்மிகு கா்ப்பரட்சாம்பிகை அம்மன் உடனுறை முல்லைவனநாதா் சுவாமி திருக்கோயிலில்

பாபநாசம் வட்டம், திருக்கருகாவூா் அருள்மிகு கா்ப்பரட்சாம்பிகை அம்மன் உடனுறை முல்லைவனநாதா் சுவாமி திருக்கோயிலில் அன்னதானத் திட்டத்தின் கீழ், ஏழை, எளிய மக்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

கரோனா நோய்த் தொற்றுப் பரவலின் 2-ஆம் அலை அதிகரித்து வரும் நிலையில், மதவழிபாட்டுத் தலங்களில் பக்தா்களின் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனினும் அன்னதானத் திட்டத்தைச் செயல்படுத்தவும், உணவைப் பொட்டலங்களாக வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனடிப்படையில் திருக்கருகாவூா் கோயிலில் அன்னதானத் திட்டத்தின் கீழ், கோயில் வெளி வளாகத்தில் தங்கியுள்ள ஏழை, எளிய, ஆதரவற்றோருக்கு உணவுப் பொட்டலங்கள் தொடா்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com