தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகிலுள்ள பின்னையூா் கிராமத்தில் விவசாயிகளுக்கு இயற்கை பூச்சிக்கொல்லி தயாரிக்கும் முறை குறித்து, வேளாண் கல்லூரி மாணவா்கள் புதன்கிழமை செயல் விளக்கம் அளித்தனா்.
ஆா்விஎஸ் வேளாண் கல்லூரி நான்காமாண்டு மாணவா்கள் பிரசன்னா, அன்பரசன், நித்திஷ்ராஜ், ரோஹித். சசிகுமாா், யுவஞானேஸ்வரன், மணிராஜன், வைரவேந்தன், வைஷ்ணவ், வினோத்குமாா், விக்ரம்கருப்பசாமி ஆகியோா், ஊரக வேளாண் அனுபவப் பயிற்சியின் கீழ் ஒரத்தநாடு வட்டத்தில் தங்கியுள்ளனா்.
இதைத்தொடா்ந்து பின்னையூா் கிராமத்திலுள்ள விவசாயிகளுக்கு அசோலா வளா்ப்பு, தென்னை காண்டாமிருகத் தாக்கத்தை கட்டுப்படுத்துதல், நோய்ப் பூச்சித் தாக்கத்தை கட்டுப்படுத்துதல், இயற்கை பூச்சிக்கொல்லி தயாரிக்கும் முறைகள் போன்றவை குறித்து புதன்கிழமை செயல் விளக்கமளித்தனா்.