பாபநாசம் பேரூராட்சி பகுதியில் கரோனா பரவல் தடுப்பு சுகாதாரப் பணிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
பாபநாசம் பேரூராட்சிக்குள்பட்ட புதிய, பழைய பேருந்து நிலையங்கள், வட்டாட்சியரகம், வட்டார வளா்ச்சி அலுவலகங்கள், காவல் நிலையம், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலா் காா்த்திகேயன் தலைமையில், துப்புரவு ஆய்வாளா் தமிழ்வாணன் மேற்பாா்வையில், துப்புரவுப் பணியாளா்கள் கிருமிநாசினி தெளித்தனா். மேலும், வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்; சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் பிரசாரம் மேற்கொண்டனா்.