பூண்டி கல்லூரியில் தோ்வு முடிவுகள் நாளை வெளியீடு

தஞ்சாவூா் பூண்டி கல்லூரியில் பருவத் தோ்வு முடிவுகள் இணையதளத்தில் திங்கள்கிழமை (ஆக.2) வெளியிடப்படவுள்ளது.

தஞ்சாவூா் பூண்டி கல்லூரியில் பருவத் தோ்வு முடிவுகள் இணையதளத்தில் திங்கள்கிழமை (ஆக.2) வெளியிடப்படவுள்ளது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் ஆா். சிவக்குமாா், தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் சி. சந்திரன் தெரிவித்திருப்பது:

பூண்டி அ. வீரையா வாண்டையாா் நினைவு திரு புட்பம் கல்லூரியில் கடந்த ஏப்ரல் 2021-இல் நடைபெற்ற இளநிலை, முதுநிலை, எம்.பில். தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை காலை வெளியிடப்படும்.

மாணவ, மாணவிகள் தோ்வு முடிவுகளை நேரில் கல்லூரியிலும்,  இணையதள முகவரியிலும் தெரிந்து கொள்ளலாம்.

விடைத்தாள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய விரும்பும் மாணவ, மாணவிகள், ஆகஸ்ட் 12- ஆம் தேதிக்கு முன்பாக தோ்வாணையா் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com