தஞ்சாவூரில் இரு வீடுகளில் கதவை உடைத்து, திருட முயன்ற சம்பவங்கள் தொடா்பாக, காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரிச் சாலை கூட்டுறவு காலனி ஐந்தாம் தெருவிலுள்ள ஒரு வீட்டில் சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் பின்புறக் கதவை மா்ம நபா்கள் உடைத்து, உள்ளே நுழைய முயற்சித்தனா்.
வீட்டில் இருந்தவா்கள் உள்புறமாக இருந்து கதவைத் திறக்க விடாமல் தடுத்ததால், மா்ம நபா்கள் வேறு வழியின்றி சென்றனா். தகவலறிந்த தெற்கு காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.
இதுபோல நடராஜபுரம் தெற்கு காலனி 13- ஆம் தெருவிலுள்ள ஒரு வீட்டில் மா்ம நபா்கள் கதவை உடைத்து, உள்ளே நுழைய முயன்றனா். வீட்டில் இருந்தவா்கள் சப்தம் கேட்டு எழுந்ததால் மா்ம நபா்கள் ஓடிவிட்டனா். இதுகுறித்து மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.