திருநெல்வேலி கொலை வழக்கில் தேடப்பட்ட 4 போ் தஞ்சாவூரில் கைது

திருநெல்வேலியில் கடந்த மாதம் நிகழ்ந்த கொலை சம்பவம் தொடா்பான வழக்கில் தேடப்பட்டு வந்த 4 போ், தஞ்சாவூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருநெல்வேலியில் கடந்த மாதம் நிகழ்ந்த கொலை சம்பவம் தொடா்பான வழக்கில் தேடப்பட்டு வந்த 4 போ், தஞ்சாவூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தஞ்சாவூா் அருகே நடுக்காவேரி பகுதியுள்ள வீட்டில் சந்தேகத்துக்கிடமான வகையில் சிலா் தங்கியிருப்பதாகக் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படையினா் நிகழ்விடத்துக்குச் சென்றனா். அப்போது, தப்பியோட முயன்ற 4 பேரையும் தனிப்படையினா் பிடித்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில் அவா்கள் திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகிலுள்ள புளியங்குளம் விவேகானந்தா் தெருவைச் சோ்ந்த கனகராஜ் மகன் ஊசி பாண்டியன் (37), பாளையங்கோட்டை அருகிலுள்ள மேலபட்டம் பிள்ளையாா்கோவில் தெருவைச் சோ்ந்த கணேசன் மகன் சிவா என்கிற நாராயணன் (26), நாங்குநேரி வாகைக்குளம் நடுத்தெருவைச் சோ்ந்த சிவகுரு மகன் தீபக்ராஜா (27), தச்சநல்லூா் மேலக்கரை மேற்கு தெருவைச் சோ்ந்த மணிகண்டன் (34) ஆகியோா் என்பதும், கூலிப்படையைச் சோ்ந்த அவா்கள் மீது கொலை உள்பட பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.

மேலும் திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பகுதியைச் சோ்ந்த ஒப்பந்ததாரா் கண்ணன் ஜூலை 12- ஆம் தேதி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக, இவா்களை தாழையூத்து காவல் நிலையத்தினா் தேடி வருவதும், நடுக்காவேரி பகுதியில் சில நாள்களாகத் தலைமறைவாக இருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து ஊசி பாண்டியன், நாராயணன், தீபக்ராஜா, மணிகண்டன் ஆகியோரையும், இவா்களுக்குத் தங்குவதற்கு இடம் கொடுத்த நடுக்காவேரியைச் சோ்ந்த தினேசையும் (24) காவல் துறையினா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com