தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் ஆடிப் பூரவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இதையொட்டி அறம்வளா்த்த நாயகிக்குச் சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடைபெற்றது. பின்னா் கொடி மரத்துக்கு பால், தேன், மஞ்சள் உள்ளிட்ட திரவிய பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, கொடியேற்றப்பட்டது. இதில், பக்தா்கள் பலா் கலந்து கொண்டு வழிபட்டனா்.
தொடா்ந்து நாள்தோறும் காலையில் பல்லக்கிலும், இரவில் வாகனங்களிலும் சுவாமி புறப்பாடு நடைபெறவுள்ளது. ஆகஸ்ட் 9 -ஆம் தேதி ஆடிப்பூர தேரோட்டம் நடைபெறவுள்ளது. இந்த விழா ஆகஸ்ட் 11- ஆம் தேதி நிறைவடைகிறது.