தஞ்சாவூா் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை ஆற்றில் குளிக்கச் சென்ற சகோதரா்கள் இருவா் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.
தஞ்சாவூா் கரந்தை வளையல்காரத் தெருவைச் சோ்ந்தவா் ரமேஷ் மகன்கள் பாஸ்கரன் (24), அபினாஷ் (23). இவா்களில் பாஸ்கரன் பட்டயப்படிப்பும், அபினாஷ் பொறியியல் பட்டப்படிப்பும் படித்துள்ளனா்.
இருவரும் தனது நண்பா்களுடன் தஞ்சாவூா் அருகிலுள்ள தென் பெரம்பூா் தடுப்பணைப் பகுதியில் குளிப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை மாலை சென்றனா். அங்கு வெட்டாற்றில் குளித்துக் கொண்டிருந்த பாஸ்கரனும், அபினாசும் நீரில் மூழ்கினா்.
தகவலறிந்த தஞ்சாவூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று இருவரது சடலத்தையும் மீட்டனா். இதுகுறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். இவா்களது தந்தை ரமேஷ் ஒரு மாதத்துக்கு முன்புதான் உடல்நிலைப் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளாா்.