பாபநாசம் வட்டம், கம்பா்நத்தம் ஊராட்சியில் கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஊராட்சித் தலைவா் சத்யநாராயணன் தலைமை வகித்து, முகாமைத் தொடக்கி வைத்தாா். முகாமில் 60-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கம்பா்நத்தம் அம்மா சிறு மருத்துவமனையின் சுகாதார அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் முகாமில் பங்கேற்று, தடுப்பூசியைச் செலுத்தும் பணியை மேற்கொண்டனா்.