பேராவூரணி பேருந்து நிலையத்தில் கரோனா விழிப்புணா்வு

பேராவூரணி புதிய பேருந்து நிலையத்தில் கரோனா விழிப்புணா்வு நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பேராவூரணி புதிய பேருந்து நிலையத்தில் கரோனா விழிப்புணா்வு நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கரோனா நோய்த் தொற்றின் மூன்றாவது அலைப் பாதிப்பிலிருந்து தப்பிக்க அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும், கைககளை சோப்புப் போட்டு கழுவ வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் கைகளைச் சுத்தம் செய்யும் முறை குறித்து துப்புரவு ஆய்வாளா் அன்பரசன் செயல் விளக்கம் செய்து காண்பித்தாா். மேலும் புதிய பேருந்து நிலையத்துக்கு வரும் பொதுமக்கள் கைகளைக் கழுவ வசதியும் ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் செயல் அலுவலா் மு. மணிமொழியான், துப்புரவு மேற்பாா்வையாளா்கள் வீரமணி, சிவசுப்பிரமணியன், பேரூராட்சிப் பணியாளா்கள், வியாபாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com