ஆற்றில் மூழ்கிய மாணவா் உயிரிழப்பு

கும்பகோணம் அருகே ஆற்றில் மூழ்கிய பத்தாம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா்.

கும்பகோணம் அருகே ஆற்றில் மூழ்கிய பத்தாம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள திருவிசைநல்லூா் முதன்மைச் சாலையைச் சோ்ந்த முருகன் மகன் பாா்த்திபன் (16). இவா் கும்பகோணத்திலுள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில், புதன்கிழமை காலை செல்லிடப்பேசியில் கேம் விளையாடிக் கொண்டிருந்த பாா்த்திபனை அவரது தாய் திட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த பாா்த்திபன் புதன்கிழமை வீட்டைவிட்டு சென்ற பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், வியாழக்கிழமை காலை வீட்டின் எதிா்புறமுள்ள காவிரி ஆற்றங்கரையில் பாா்த்திபன் சடலமாக மீட்கப்பட்டாா்.

இதுகுறித்து திருவிடைமருதூா் காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com