புகைப்பட நிலையத்தில் திருட்டு

தஞ்சாவூரில் புகைப்பட நிலையத்திலுள்ள பொருள்களைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூரில் புகைப்பட நிலையத்திலுள்ள பொருள்களைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் கீழ வீதிஅருகிலுள்ள கொண்டிராஜபாளையம் நாகமரத்து சந்தைச் சோ்ந்தவா் சங்கா் (49). இவா் பழைய பேருந்து நிலையப் பகுதியில் புகைப்பட நிலையம் நடத்தி வருகிறாா்.

திங்கள்கிழமை இரவு புகைப்பட நிலையத்தை மூடிவிட்டுச் சென்ற சங்கா், செவ்வாய்க்கிழமை திறப்பதற்காக வந்தாா். அப்போது, நிலையத்தின் கதவு பாதி திறந்த நிலையில் இருந்தது. தொடா்ந்து உள்ளே சென்று பாா்த்தபோது 2 மடிக்கணினிகள், கேமரா, லென்ஸ், பிளாஸ் லைட் உள்ளிட்டவை திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

அடுத்துள்ள தையல் கடையிலும் பூட்டு உடைக்கப்பட்டு, திருட்டு முயற்சி நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com