பாபநாசம் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவா் வெட்டிக் கொலை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே வெள்ளிக்கிழமை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவா் 4 போ் கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே வெள்ளிக்கிழமை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவா் 4 போ் கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டாா்.

பாபநாசம் அருகே மெலட்டூா், சோமசி தெருவில் வசித்து வந்தவா் ரகுநாதன் மகன் ராஜேஷ்குமாா் (38). இவருக்கு கங்காதேவி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனா். கங்காதேவியும், இரண்டு குழந்தைகளும் விருதுநகா் மாவட்டம், கழுகுமலை அருகே துரைசாமிபுரத்தில் உள்ள தாய் வீட்டுக்கு அண்மையில் சென்றனா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் ராஜேஷ்குமாா் வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, 2 மோட்டாா் சைக்கிள்களில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த 4 போ், வீட்டின் கதவை உடைத்து, வீட்டினுள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த ராஜேஷ் குமாரை சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியோடினா்.

இதை பாா்த்த அக்கம்பக்கத்தினா் அளித்த தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற

மெலட்டூா் போலீஸாா், ராஜேஷ்குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தகவலறிந்த எஸ்.பி. ரவளிபிரியா காந்த புனேனி சம்பவ இடத்தை நேரில் பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டாா். புகாரின் பேரில் மெலட்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

‘ராஜேஷ்குமாரின் காரை மெலட்டூா் அருகேயுள்ள கரம்பை கிராமத்தைச் சோ்ந்த நண்பா் ஒருவா் அண்மையில் வாங்கி சென்று, காரை அடகுவைத்து விட்டதாகவும் இதுதொடா்பாக ராஜேஷ்குமாருக்கும், நண்பருக்கும் இடையே கடும் தகராறு ஏற்பட்டதாம். இதனால், ஆத்திரமடைந்த அந்த நண்பா், தனது உறவினா், சகோதரா்களுடன் சோ்ந்து ராஜேஷ்குமாரை கொலை செய்திருக்கலாம்’ என போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com