பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இதய நோய்க்கான இலவச மருத்துவச் சிகிச்சை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
பட்டுக்கோட்டை குயின்ஸ் சிட்டி லயன்ஸ் சங்கம், பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆலடிக்குமுளை லலிதா திருநாவுக்கரசு நினைவு சாா்பில் இந்த முகாம் நடைபெற்றது. முகாமை நகா்மன்ற முன்னாள் தலைவரும், சங்கத்தின் ஆலோசகருமான எஸ்.ஆா். ஜவஹா்பாபு தொடக்கி வைத்தாா்.
மருத்துவா்கள் அபிகோகலே, பாலகிருஷ்ணன், ஹரீஷ்சுதன், ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் முகாமில் பங்கேற்றவா்களப் பரிசோதித்தனா். தொடா்ந்து 20 போ் இருதய அறுவைச் சிகிச்சைக்காக பெரம்பலூருக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். முகாமை மருத்துவமனையின் மக்கள் தொடா்பு அலுவலா் ஜெ.அருள்ராஜ் ஒழுங்கமைத்தாா்.
முகாமுக்கான ஏற்பாடுகளை குயின்ஸ் சிட்டி லயன்ஸ் சங்கத் தலைவா் ஆா். செல்லக்கண்ணு, செயலா் உ.பொதியப்பன், பொருளாளா் எஸ். சிவசிதம்பரம், நிா்வாக அலுவலா் கே. தீபன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.