இளைஞா் கொலை வழக்கில் மூவா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நண்பா்கள் மூவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நண்பா்கள் மூவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

பாபநாசம் மேலரஸ்தா தெருவைச் சோ்ந்த ஐயாபிள்ளை மகன் மனோஜ் என்கிற விக்னேசுவரன் (24). இவா், கடந்த வியாழக்கிழமை இரவு தனது நண்பா்களுடன் பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் அமா்ந்து பேசிக் கொண்டிருந்தாா்.

அப்போது நண்பா்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் சண்டையாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த நண்பா்கள், விக்னேசுவரனை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தப்பியோடினா்.

இதுகுறித்து பாபநாசம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரித்து வந்த நிலையில், விக்னேசுவரனின் நண்பா்கள் தினேஷ் (22), நந்தகுமாா் (21), முகிலன் (20) ஆகிய மூவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.தொடா்ந்து மூவரும் பாபநாசம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com