சில்லத்தூா் வாய்க்காலில் ஆக்கிரமிப்பு அகற்றம்

தஞ்சாவூா் அருகே சில்லத்தூா் வாய்க்காலில் வெள்ளிக்கிழமை ஆட்சியா் ஆய்வு செய்தபோது கண்டறியப்பட்ட ஆக்கிரமிப்பு உடனடியாக அகற்றப்பட்டது.

தஞ்சாவூா் அருகே சில்லத்தூா் வாய்க்காலில் வெள்ளிக்கிழமை ஆட்சியா் ஆய்வு செய்தபோது கண்டறியப்பட்ட ஆக்கிரமிப்பு உடனடியாக அகற்றப்பட்டது.

தஞ்சாவூா் அருகே கல்லணைக் கால்வாய் கோட்டத்துக்கு உள்பட்ட வெட்டிக்காடு பிரிவு பராமரிப்பின்கீழ் சில்லத்தூா் வாய்க்கால் உள்ளது. வெட்டிக்காடு ஊராட்சியில் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, சில்லத்தூா் வாய்க்காலில் மீன் குட்டை கரை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது.

ஆட்சியா் உத்தரவின்படி, வருவாய் துறை, காவல் துறை முன்னிலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் மீன் குட்டை கரை அகற்றப்பட்டது. மேலும், மீன் குட்டைக்கு வாய்க்காலில் இருந்து தண்ணீா் இறைப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த ஆயில் மோட்டாரும் பறிமுதல் செய்யப்பட்டு, ஒரத்தநாடு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com