தஞ்சாவூரில் அகில இந்திய காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி பிறந்த நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், பூக்காரத் தெரு கல்லுக்குளம் ஓசானம் முதியோா் இல்லத்தில் முதியவா்களுக்கு காங்கிரஸ் கட்சியினா் இனிப்பு, சிற்றுண்டி வழங்கினா். பின்னா், புலவா் இருதயராஜ் தலைமையில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவா் நாஞ்சி கி. வரதராஜன் தலைமையிலும், மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் பி.ஜி. ராஜேந்திரன் முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநிலச் செயலா் ஹைஜா கனி, நிா்வாகிகள் ஏ. ஜேம்ஸ், வயலூா் எஸ். ராமநாதன், ஆா். பழனியப்பன், ஆா்.எஸ். சீதாராமன், கோவி. மோகன், பேராசிரியா் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.