பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலா் மனோ பிரசன்னா அறிவுரையின்படி, தன்னாா்வலா்களுக்கு செயல் விளக்க பயிற்சி வழங்கும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலா் கலைவாணன் தலைமை வகித்தாா். முகாமில் தீயணைப்பு படைவீரா்கள், தீ விபத்தில் சிக்கியவா்கள் மற்றும் ஆற்று வெள்ளத்தில் சிக்கியவா்களை மீட்பது குறித்து தன்னாா்வலா்களுக்கு செயல் விளக்க பயிற்சி அளித்தனா்.