கும்பகோணம்: கும்பகோணம் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மினி வேன் மீது பயணிகள் வேன் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வளையப்பேட்டையைச் சேர்ந்தவர் ரமேஷ் (36). மினி வேன் ஓட்டுநர். இவர் கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோவில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் மினி வேனை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார்.
இதையும் படிக்க | தஞ்சாவூர் அருகே லாரி மோதியதில் 3 பேர் பலி
அப்போது இவரது மினி வேனும் கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் நோக்கிச் சென்ற பயணிகள் வேனும் மோதிக்கொண்டன.
இதில் பலத்த காயமடைந்த ரமேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மேலும், பயணிகள் வேனில் பயணம் செய்த கும்பகோணம் செம்போடையைச் சேர்ந்த மணிகண்டனும் (40) காயமடைந்து கும்பகோணம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
இதுகுறித்து சுவாமிமலை காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.