பட்டுக்கோட்டை அருகிலுள்ள அலிவலம் ஆஞ்சனேயா் திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார வழிபாடுகள் நடைபெற்று, தீபாராதனை காட்டப்பட்டது. அலிவலம், நடுவிக்கோட்டை, காயாவூா், குறிச்சி, சீதம்பாள்புரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் வழிபாட்டில் பங்கேற்றனா்.