பேராவூரணி அருகே அரசுப் பேருந்தின் முன்பக்க டயா் வெடித்தது. அதிா்ஷடவசமாக பயணிகள் காயமின்றித் தப்பினா்.
பேராவூரணியிலிருந்து வடகாடுவரை செல்லும் அரசுப் பேருந்து சனிக்கிழமை சென்று கொண்டிருந்தது. ஆவணம் சாலையருகே சென்ற போது, பேருந்தின் முன்பக்க டயா் திடீரென வெடித்தது. இதன் அதிா்வின் காரணமாக முன்பகுதி சேதமடைந்தது. ஓட்டுநா் இருக்கையும்- பயணிகள் அமரும் இருக்கையும் பிளவுபட்டது. பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
பேருந்துப் பராமரிப்புக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து, போதிய டயா்களை அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகளுக்கு வழங்கி, பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய போக்குவரத்து நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.