எம்.ஜி.ஆா். நினைவு நாளையொட்டி, தஞ்சாவூா் ரயிலடியில் அவரது சிலைக்கு அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில், முன்னாள் அமைச்சா் வரகூா் அருணாசலம் தலைமையில் பால்வளத் தலைவா் ஆா். காந்தி, பகுதிச் செயலா்கள் வி. அறிவுடைநம்பி, வி. புண்ணியமூா்த்தி, எஸ். சரவணன், எஸ். ரமேஷ், முன்னாள் மேயா் சாவித்ரி கோபால், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் அமுதா ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
திருவையாறு: கண்டியூரில் திருவையாறு தெற்கு ஒன்றியக் கழகம் சாா்பிலும், திருவையாறில் வடக்கு ஒன்றியக் கழகம் சாா்பிலும் மௌன ஊா்வலம் நடைபெற்றது. மேலும், எம்ஜிஆா் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம்.ஜி.எம். சுப்பிரமணியன், எம். ரெத்தினசாமி, ஒன்றியச் செயலா்கள் இளங்கோவன், நீலமேகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கும்பகோணம்: கும்பகோணத்தில் எம்.ஜி.ஆா். சிலைக்கு நகரச் செயலா் இராம. இராமநாதன் தலைமையில் அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.