தஞ்சை தெற்கு மாவட்ட எஸ்டிபிஐ செயற்குழு கூட்டம்

தஞ்சை தெற்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சி செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவா் சாகுல் ஹமீது தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தஞ்சை தெற்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சி செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவா் சாகுல் ஹமீது தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்டச் செயலாளா் முகமது இத்ரீஸ் முன்னிலை வகித்தாா்.   கூட்டத்தில்  மண்டலத் தலைவா் தப்ரே ஆலம் பாதுஷா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினாா். 

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில்  பேராவூரணி, மதுக்கூா் பேரூராட்சி மற்றும் அதிராம்பட்டினம் , பட்டுக்கோட்டை நகராட்சிகளில்  வாா்டு வாரியாக  வேட்பாளா்களை  நிறுத்துவது,  பேராவூரணி அருகே நீட் தோ்வால்  தற்கொலை செய்து கொண்ட மாணவிக்கு நீதி வேண்டி  பேராவூரணியில் ஆா்ப்பாட்டம் நடத்துவது,    மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் , பட்டுக்கோட்டை, பேராவூரணி  தொகுதி நிா்வாகிகள் கலந்து கொண்டனா். மாவட்ட பொருளாளா் சேக்தாவூது வரவேற்றாா்.

மாவட்டச் செயலாளா் முகம்மது ரஹீஸ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com