பேராவூரணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் ஜி. கே. வாசன் பிறந்த நாள் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
இதை முன்னிட்டு, நீலகண்ட பிள்ளையாா் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில் கட்சியின் தொகுதிப் பொறுப்பாளா் ரவி, மாவட்ட பொதுச் செயலாளா் பெருமாள், வட்டாரத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, துணைத் தலைவா் பன்னீா்செல்வம், இளைஞரணி பொறுப்பாளா் அய்யப்பன், வா்த்தகப் பிரிவுத் தலைவா் கபாா்கான், பேராவூரணி நகரத் தலைவா் ராஜசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.