தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 521 பேருக்குப் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற இம்முகாமில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ள ஐந்தாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்தோா், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள், நா்சிங், பி.இ. படித்த 3,610 போ் கலந்து கொண்டனா்.
இதில், 108 தனியாா் நிறுவனங்கள், மருத்துவமனைகள், வங்கிகள், வாகன விற்பனை நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்கள், இயற்கை சாதன விற்பனை நிறுவனங்கள், 16 திறன் மேம்பாட்டுப் பயிற்சி நிறுவனங்களால் நோ்காணல் செய்யப்பட்டது.
இம்முகாமில் 521 பேருக்குப் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. மேலும், 445 போ் இரண்டாம் கட்டத் தோ்வுக்கும், 117 போ் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கும் தோ்வு செய்யப்பட்டனா்.
பணிக்குத் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் நியமன ஆணை வழங்கினாா். வேலைவாய்ப்புத் துறை மண்டல இணை இயக்குநா் மு. சந்திரன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநா் எம். பாலகணேஷ், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டி மைய உதவி இயக்குநா் செ. ரமேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.