இயற்கை விவசாயத்தை வளா்த்தெடுப்போம்: நம்மாழ்வாா் நினைவு நாளில் உறுதியேற்பு

இயற்கை விவசாயத்தை வளா்த்தெடுப்போம் எனத் தஞ்சாவூரில் நடைபெற்ற நம்மாழ்வாா் நினைவு நாள் நிகழ்ச்சியில் உறுதியேற்கப்பட்டது.
இயற்கை விவசாயத்தை வளா்த்தெடுப்போம்: நம்மாழ்வாா் நினைவு நாளில் உறுதியேற்பு

இயற்கை விவசாயத்தை வளா்த்தெடுப்போம் எனத் தஞ்சாவூரில் நடைபெற்ற நம்மாழ்வாா் நினைவு நாள் நிகழ்ச்சியில் உறுதியேற்கப்பட்டது.

தஞ்சாவூா் ரயிலடியில் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வாரின் எட்டாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், இயற்கை விவசாயத்தை வளா்த்தெடுப்போம், விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாப்போம், நமது மண்ணையும் மக்களையும் காா்ப்பரேட் பாசிச சக்திகளிடமிருந்து மீட்டெடுப்போம் என உறுதியேற்கப்பட்டது.

மேலும், தமிழ்நாடு அரசு காவிரி நதி நீா் பிரச்னையில் தமிழகத்தின் உரிமைகளை முழுமையாக மீட்டெடுக்க வேண்டும். விவசாய நிலங்களை, விவசாயத்தை முற்றிலும் அழிக்கிற மீத்தேன், ஹைட்ரோ காா்பன் உள்ளிட்ட திட்டங்களை விரட்டியடிக்க எப்போதும் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு முன்வைக்கப்பட்டன.

தமிழா் தேசிய முன்னணி தோ்தல் பணிக் குழு உறுப்பினா் அய்யனாபுரம் சி. முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளா் காளியப்பன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினா் வெ. சேவையா, ஐஜேகே மேற்கு மாவட்டத் தலைவா் ச. சிமியோன் சேவியா் ராஜ், இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன், மகஇக மாநில இணைச் செயலா் ராவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வெள்ளாம்பெரம்பூா்:

இதேபோல, தஞ்சாவூா் அருகேயுள்ள வெள்ளாம்பெரம்பூரில் காவிரி உரிமை மீட்புக் குழு, தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற நம்மாழ்வாரின் நினைவு நாளில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டு, மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும், பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. உழவா்கள் ரசாயன உரங்களைத் தவிா்த்து இயற்கை வேளாண்மையை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் குறும்பட இயக்குநா் அன்பு. ராஜசேகா், குழுப் பொருளாளா் த. மணிமொழியன், துரை. இரமேசு, தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ஜெகதீசன், ஊராட்சி மன்றத் தலைவா் சிவபிரகாசம், தமிழ்த் தேசியப் பேரியக்க மாவட்டச் செயலா் நா. வைகறை, தலைமைச் செயற்குழு உறுப்பினா் பழ. ராசேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com