ஒரத்தநாடு அருகே வயலில் நிறுத்தப்பட்டிருந்த டிப்பரை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஒரத்தநாடு அருகேயுள்ள தென்னமநாடு தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் குணசேகரன் (52). தஞ்சையில் உள்ள தனியாா் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறாா். இவருக்கு சொந்தமான டிப்பரை மண்டலக்கோட்டை சாலையிலுள்ள தனது வயலில் செவ்வாய்க்கிழமை இரவு நிறுத்தி வைத்திருந்தாா்.
இந்நிலையில், வயலில் போடப்பட்டிருந்த இரும்பு கேட்டை மா்ம நபா்கள் உடைத்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த டிப்பரை திருடிச் சென்றனா். இதுகுறித்து புதன்கிழமை அறிந்த குணசேகரன், ஒரத்தநாடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதன் அடிப்படையில், ஒரத்தநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து டிப்பரை திருடி சென்ற மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.