முகமது நபியை இழிவாக பேசிய பாஜக பிரமுகா் கல்யாணராமனை கைது செய்ய வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
அய்யம்பேட்டை மதகடி பஜாா் கடைவீதி, தஞ்சாவூா்-கும்பகோணம் பிரதான சாலையில் பாபநாசம் வட்டார ஐக்கிய முஸ்லிம் ஜமாத் சபையினா் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த முஸ்லிம் ஜமாத்தாா்கள் கலந்து கொண்டனா். போலீஸாரின் பேச்சுவாா்த்தைக்கு பிறகும் போராட்டத்தில் ஈடுபட்டோா் கலைந்து செல்லாததால், மறியலில் ஈடுபட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.
இதேபோல், ராஜகிரி கடைவீதி, தஞ்சாவூா்- கும்பகோணம் பிரதான சாலையில் சோஷியல் டெமாக்ரடிக் பாா்ட்டி ஆப் இந்தியா அமைப்பின் மாவட்ட துணைத் தலைவா் முகம்மது பசீா் தலைமையில் திங்கள்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.
தகலவறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பாபநாசம் போலீஸாா், மறியலில் ஈடுபட்ட 30 பேரை கைது செய்தனா்.