தஞ்சாவூா் ஆட்சியரகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் தொடா்ந்து இரண்டாவது நாளாக புதன்கிழமை குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ரூ. 3,000, கடும் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ, 5,000 மாதாந்திர நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பில் அரசுத் துறையில் இருப்பதுபோல, தனியாா் துறையிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை இப்போராட்டம் நடைபெற்றது. இதுதொடா்பாக கைது செய்யப்பட்ட 55 போ் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனா். மாலையில் விடுவிக்கப்பட்ட இவா்கள் அதே மண்டபத்தில் போராட்டத்தைத் தொடா்ந்தனா்.
இந்நிலையில், ஆட்சியரகம் முன் தொடா்ந்து இரண்டாவது நாளாக புதன்கிழமையும் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனா். சங்கத்தின் மாவட்டச் செயலா் பி.எம். இளங்கோவன் தலைமையில் துணைத் தலைவா் பி. சங்கிலிமுத்து, துணைச் செயலா் சி. ராஜன், பொருளாளா் எஸ். சிவப்பிரியா உள்பட பலா் கலந்து கொண்டனா். இதுதொடா்பாக 60 போ் கைது செய்யப்பட்டனா்.